எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா |
கலர்ஸ் தமிழின் 'திருமணம்' சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் தொடர்ந்து 'சித்தி' சீரியலில் ஹீரோயின் ரோலில் நடித்து வந்தார். தவிர மாடலிங்கில் கலக்கி வந்த ப்ரீத்தி ஷர்மாவிற்கு வாலிபர்கள் பலரும் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சித்தி 2 சீரியல் சிலமாதங்களுக்கு முன் நிறைவுற்றது. இதனையடுத்து ப்ரீத்தி ஷர்மாவுக்கு தமிழில் வேறெந்த பிராஜெக்டும் கிடைக்காததால் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு மூட்டை கட்டி சென்றுவிட்டார். இதனால் தமிழகத்தில் அவரது ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் தமிழ் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக உருவாகவுள்ள சீரியலில் அக்னி, தினேஷ், நிவிஷா மற்றும் ராதிகா ப்ரீத்தி ஆகியோர் மெயின் ரோல்களில் நடிக்க இருந்தனர். தற்போது அந்த தொடரிலிருந்து ராதிகா ப்ரீத்தி விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக ப்ரீத்தி ஷர்மா என்ட்ரி கொடுக்க உள்ளார். ப்ரீத்தி ஷர்மா இந்த தொடரில் அக்னிக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியானது ப்ரீத்தி ஷர்மா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சீரியல் குறித்த அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.