நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ப்ரியங்கா நல்காரி, அந்த சீரியல் முடிந்த பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் நடித்து வந்தார். ஆனால், சீரியல் தொடங்கி சில மாதங்களில் தனது காதலர் ராகுலை திடிரென ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன்காரணமாக சில நாட்களிலேயே சீரியலை விட்டும் விலகினார். இதனால் ரசிகர்கள் பலரும் ப்ரியங்கா இனி நடிக்கவே வரமாட்டாரா? என வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அண்மையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தெலுங்கு கம்பேக் என ஹேஷ்டேக் போட்டிருந்தார். தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள நளதமயந்தி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த பூஜையில் ப்ரியங்கா நல்காரியும் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். இந்த தொடரில் ப்ரியங்காவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்கிறார்.