நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் நாளை மறுநாள் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக படக்குழுவினர் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தனர். இந்திய அளவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'பொன்னியின் செல்வன்'.
இந்தப் படத்திற்கு அடுத்து தெலுங்கிலிருந்து 'ஷாகுந்தலம்' என்ற சரித்திரப் படம் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் சில பல வெற்றிப் படங்களைக் கொடுத்த குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்திலும், மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கான புரமோஷன் சுற்றுப் பயணத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களிலும், பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் சமந்தா. தற்போது இந்தப் படத்திற்காக சமூக வலைத்தளங்களில் தனது பதிவுகளை பதிவிட ஆரம்பித்துள்ளார். புரமோஷன் சுற்றுப் பயணத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.