இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் நாளை மறுநாள் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக படக்குழுவினர் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தனர். இந்திய அளவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'பொன்னியின் செல்வன்'.
இந்தப் படத்திற்கு அடுத்து தெலுங்கிலிருந்து 'ஷாகுந்தலம்' என்ற சரித்திரப் படம் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் சில பல வெற்றிப் படங்களைக் கொடுத்த குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்திலும், மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கான புரமோஷன் சுற்றுப் பயணத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களிலும், பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் சமந்தா. தற்போது இந்தப் படத்திற்காக சமூக வலைத்தளங்களில் தனது பதிவுகளை பதிவிட ஆரம்பித்துள்ளார். புரமோஷன் சுற்றுப் பயணத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.