2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் பலரும் பலவிதமாக இருப்பார்கள். இப்போதெல்லாம் தங்கள் அபிமான நடிகர்கள், நடிகைகளுடன் செல்பி எடுக்க வேண்டும் என்பதுதான் பல ரசிகர்கள் ஆசையாக இருக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் ஆட்டோகிராப் தான் கேட்டு வாங்குவார்கள்.
ஆனால், ராஷ்மிகாவின் அதி தீவிர இளம் ரசிகர்கள் ஒருவர் இரண்டையும் செய்திருக்கிறார், கொஞ்சம் ஓவராக. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம் ஒரு இளம் வாலிபர் செல்பி எடுக்க வேண்டுமெனக் கேட்க மறுக்காமல் அந்த அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார் ராஷ்மிகா. அடுத்ததாக தனது மார்பில் ராஷ்மிகாவின் ஆட்டோகிராப் வேண்டுமென்று அவர் கேட்டார். முதலில் அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா பின்னர் அந்த இளைஞர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் தனது ஆட்டோகிராபை பதிவிட்டார்.
அதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் அது பற்றி கேட்டதற்கு 'சோ க்யூட்' என சிரித்துக் கொண்டே சென்றார் ராஷ்மிகா.