நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் பலரும் பலவிதமாக இருப்பார்கள். இப்போதெல்லாம் தங்கள் அபிமான நடிகர்கள், நடிகைகளுடன் செல்பி எடுக்க வேண்டும் என்பதுதான் பல ரசிகர்கள் ஆசையாக இருக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் ஆட்டோகிராப் தான் கேட்டு வாங்குவார்கள்.
ஆனால், ராஷ்மிகாவின் அதி தீவிர இளம் ரசிகர்கள் ஒருவர் இரண்டையும் செய்திருக்கிறார், கொஞ்சம் ஓவராக. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம் ஒரு இளம் வாலிபர் செல்பி எடுக்க வேண்டுமெனக் கேட்க மறுக்காமல் அந்த அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார் ராஷ்மிகா. அடுத்ததாக தனது மார்பில் ராஷ்மிகாவின் ஆட்டோகிராப் வேண்டுமென்று அவர் கேட்டார். முதலில் அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா பின்னர் அந்த இளைஞர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் தனது ஆட்டோகிராபை பதிவிட்டார்.
அதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் அது பற்றி கேட்டதற்கு 'சோ க்யூட்' என சிரித்துக் கொண்டே சென்றார் ராஷ்மிகா.