டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் பலரும் பலவிதமாக இருப்பார்கள். இப்போதெல்லாம் தங்கள் அபிமான நடிகர்கள், நடிகைகளுடன் செல்பி எடுக்க வேண்டும் என்பதுதான் பல ரசிகர்கள் ஆசையாக இருக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் ஆட்டோகிராப் தான் கேட்டு வாங்குவார்கள்.
ஆனால், ராஷ்மிகாவின் அதி தீவிர இளம் ரசிகர்கள் ஒருவர் இரண்டையும் செய்திருக்கிறார், கொஞ்சம் ஓவராக. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம் ஒரு இளம் வாலிபர் செல்பி எடுக்க வேண்டுமெனக் கேட்க மறுக்காமல் அந்த அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார் ராஷ்மிகா. அடுத்ததாக தனது மார்பில் ராஷ்மிகாவின் ஆட்டோகிராப் வேண்டுமென்று அவர் கேட்டார். முதலில் அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா பின்னர் அந்த இளைஞர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் தனது ஆட்டோகிராபை பதிவிட்டார்.
அதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் அது பற்றி கேட்டதற்கு 'சோ க்யூட்' என சிரித்துக் கொண்டே சென்றார் ராஷ்மிகா.