பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், பெரிய அளவில் அறிமுகமில்லாத ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா சண்முகம். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளருடன் கூட்டணி சேர்த்துக்கொண்டு நடிகர் ஆரியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து விமர்சனத்திற்கு ஆளான சம்யுக்தா அதன்மூலமே பிரபலமும் ஆனார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் காபி வித் காதல் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்துள்ள சம்யுக்தா தெலுங்கில் விஜய் முதன் முதலாக நடித்து வரும் வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரம் என்றாலும் விஜய்யுடன் நடித்த காட்சிகள் தனக்கு திருப்திகரமாக அமைந்தது என்று கூறியுள்ளார் சம்யுக்தா. படப்பிடிப்பில் விஜய்யுடன் நடித்த பழகிய அனுபவம் குறித்து கூறும்போது விஜய்யின் நடிப்பை, அவரது அர்ப்பணிப்பு உணர்வை நேரில் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது அவருடைய குடையை கூட அவரே தான் தன் கையில் வைத்துக்கொண்டு பிடித்துக் கொள்கிறார். அந்த அளவிற்கு அவர் எளிமையான மனிதர். அவரது நடிப்பை இன்னும் படம் வெளியாவதற்கு முன்பே பார்த்து ரசித்த முதல் ஆள் என்பதால் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று விஜய் பற்றி பிரமித்து கூறியுள்ளார் சம்யுக்தா.