‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
மலையாளத்தில் தனது அறிமுகத்தை துவங்கிய துல்கர் சல்மான் கடந்த 10 வருடங்களில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்து நிலையான இடத்தை பிடித்துள்ளதுடன் தற்போது பாலிவுட்டிலும் தேடப்படும் நபராக மாறியுள்ளார். சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த சீதாராமம் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது, பல பேட்டிகளில் அவரிடம் கேட்கப்படுவது என்னவென்றால் எப்போது அவரது தந்தை மம்முட்டியுடன் அவர் இணைந்து நடிக்கப் போகிறார் என்பது தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “நான் எப்போதுமே என் தந்தையுடன் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் இன்னும் அவர் பக்கமிருந்து எந்த ஒரு கிரீன் சிக்னலும் வரவில்லை. இப்பொழுதே வெள்ளை முடிகள் எட்டிப்பார்க்கின்ற தாடியை மஸ்காரா போட்டு சமாளித்து வருகிறேன். அவர் அப்படியேதான் இருக்கிறார். இப்போது அவர் இருக்கும் தோற்றத்தைப் பாருங்கள்.. ஒருவேளை அவருக்கு தந்தையாக கூட நான் நடிக்கும் நிலை வந்தாலும் வரலாம்” என்று தந்தையை வியந்து பாராட்டியுள்ளார் துல்கர் சல்மான்