பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
மலையாளத்தில் தனது அறிமுகத்தை துவங்கிய துல்கர் சல்மான் கடந்த 10 வருடங்களில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்து நிலையான இடத்தை பிடித்துள்ளதுடன் தற்போது பாலிவுட்டிலும் தேடப்படும் நபராக மாறியுள்ளார். சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த சீதாராமம் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது, பல பேட்டிகளில் அவரிடம் கேட்கப்படுவது என்னவென்றால் எப்போது அவரது தந்தை மம்முட்டியுடன் அவர் இணைந்து நடிக்கப் போகிறார் என்பது தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “நான் எப்போதுமே என் தந்தையுடன் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் இன்னும் அவர் பக்கமிருந்து எந்த ஒரு கிரீன் சிக்னலும் வரவில்லை. இப்பொழுதே வெள்ளை முடிகள் எட்டிப்பார்க்கின்ற தாடியை மஸ்காரா போட்டு சமாளித்து வருகிறேன். அவர் அப்படியேதான் இருக்கிறார். இப்போது அவர் இருக்கும் தோற்றத்தைப் பாருங்கள்.. ஒருவேளை அவருக்கு தந்தையாக கூட நான் நடிக்கும் நிலை வந்தாலும் வரலாம்” என்று தந்தையை வியந்து பாராட்டியுள்ளார் துல்கர் சல்மான்