Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் - ஆச்சரியப்பட்ட ராஜமவுலி

28 செப், 2022 - 10:11 IST
எழுத்தின் அளவு:
Rajamouli-surprised-about-Ponniyin-Selvan

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான படமாக நாளை மறுநாள் செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாகிறது. இப்படத்தை ஒரு சிலர் 'பாகுபலி' படத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களையும் மிகக் குறைந்த நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் மணிரத்னம். அது பற்றிய தகவலை பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி தெரிவித்திருக்கிறார்.

“சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியைச் சந்தித்தேன். அவரிடம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களையும் நாங்கள் 150 நாட்களில் எடுத்த முடித்துவிட்டோம் என்றேன். அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். நான் 'பிரான்க்' செய்கிறேன் என அவர் திரும்பக் கேட்டார். அதற்கு உண்மைதான் சார் 150 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம் என்றேன். அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடிக்கக் காரணமாக இருந்த திட்டங்கள், செயல்முறை என்ன என்று அவர் ஆர்வத்துடன் கேட்டார்,” என அந்த பேட்டியில் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகப் படப்பிடிப்புகளும் 600 நாட்கள் வரை நடைபெற்றதாக அப்போது செய்திகள் வெளிவந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் விஷால் வீட்டில் கல்வீச்சுநடிகர் விஷால் வீட்டில் கல்வீச்சு ஷாகுந்தலம் - அடுத்த சரித்திரப் பட சுற்றுப் பயணம் ஷாகுந்தலம் - அடுத்த சரித்திரப் பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

M Ramachandran - Chennai,இந்தியா
01 அக், 2022 - 23:40 Report Abuse
M  Ramachandran பழைய நாவலாசிரியர்கள் மிக கூர்மையாக யோசித்து. ஒரு உதாரணம்.யிலான மோகனாம்பள் கதையை எழுதிய கோத்த மங்களம் சுப்பு அவர்கள் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி சுரங்க பாதையில் இறங்கி வருவதாக சொல்லியிருப்பார். திரையில் நீங்கள் காட்டிய காட்சி தவறானது தஞ்சையில் ஓவர் பிரிட்ஜு தான் இருக்கிறது என்றதற்கு இந்த கதையின் படி அந்த வருடத்தில் சுரங்க பாதை இருந்தது இதைய உங்களுக்கு தெரிந்த வயதானவர்களாய் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று பதில் கொடுத்தார்.
Rate this:
M Ramachandran - Chennai,இந்தியா
01 அக், 2022 - 23:34 Report Abuse
M  Ramachandran இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க கூடாது.இரண்டுமென சிறந்த படங்கள் என்பதை. நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இரு பட இக்குணர்களுமென தங்களல்லால் முடிந்த வரை சிறப்பாக முடித்திருக்கிறார்கள். போனின் செல்வன் கதை கலக்கி அவர்கள் எழுதியதில் ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நிற்க கூடியவை. அந்த ஆழ்வார் கடியான் வேடமும், கந்த மாறன், பூங்குழலி மற்றும் அந்த பூ குடலையுடன் சிவ கைய்ங்கரியும் செய்யும் (உண்மையான கண்டாரத்தாரின் வாரிசு) அதிகம் எடுத்து கூற இயலாது. முக்கியத்துவமுள்ளதாக கதையில் கொடுத்திருப்பார். திரையில் அது போனால் முக்கியத்துவம் கொடுக்க நெறம் பற்றாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in