தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான படமாக நாளை மறுநாள் செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாகிறது. இப்படத்தை ஒரு சிலர் 'பாகுபலி' படத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களையும் மிகக் குறைந்த நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் மணிரத்னம். அது பற்றிய தகவலை பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி தெரிவித்திருக்கிறார்.
“சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியைச் சந்தித்தேன். அவரிடம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களையும் நாங்கள் 150 நாட்களில் எடுத்த முடித்துவிட்டோம் என்றேன். அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். நான் 'பிரான்க்' செய்கிறேன் என அவர் திரும்பக் கேட்டார். அதற்கு உண்மைதான் சார் 150 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம் என்றேன். அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடிக்கக் காரணமாக இருந்த திட்டங்கள், செயல்முறை என்ன என்று அவர் ஆர்வத்துடன் கேட்டார்,” என அந்த பேட்டியில் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகப் படப்பிடிப்புகளும் 600 நாட்கள் வரை நடைபெற்றதாக அப்போது செய்திகள் வெளிவந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.