பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் பலர் நடிப்பில் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முன்பதிவு இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. அதிகாலை 4.30 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கும் முன்பதிவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பள்ளிகளின் காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை தினம் என்பதாலும், விஜயதசமி விடுமுறை வருவதாலும் பலரும் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது தெரிகிறது.
படத்திற்கான பிரமோஷன் மிகவும் குறைவாக உள்ளது என்று விமர்சனம் எழுந்த நிலையில் படக் குழுவினர் கடந்த சில நாட்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.
தமிழில் மட்டுமே இந்த முன்பதிவு சிறப்பாக இருந்து வருகிறது. இன்னும் பல தியேட்டர்களில் முன்பதிவு ஆரம்பமாகவில்லை. இன்றும், நாளையும் ஆரம்பமாக உள்ளது. படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் தமிழில் முதல் நாள் வசூலாக புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மொழிகளில் முன்பதிவு ஆரம்பமான நிலையில், அங்கெல்லாம் குறிப்பிட்ட அளவில் கூட நடக்கவில்லை.