‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 10 நபர்களில் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். 3 மாத சிறை தண்டனைக்குப் பிறகு ஜாமின் பெற்று தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட நடிகை, உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் தனது வழக்கின் விசாரணை பாரபட்சமாக இருப்பதாகவும் அங்கிருந்து முறையான நீதி கிடைக்காது என கருதுவதால் அதை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அதில் கோரிக்கை வைத்துள்ளார். கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதி திலீப் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அதனால் இந்த விசாரணை நியாயமானதாக இல்லை என்றும் அதற்கு காரணமாக சம்பந்தப்பட்ட நடிகை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த காரணத்தை தெரியப்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நடிகை தரப்பில் கேட்டுக் கொண்டிருந்த கோரிக்கையையும் நிராகரித்த நீதிமன்றம் இந்த தகவலையும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வழக்கு விசாரணையை ஒரு பெண் நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட நடிகை வைத்த கோரிக்கையின்படி தான் தற்போது பெண் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது