ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் காட்பாதர். மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் அக்டோபர் 5ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது.
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தியை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவி சல்மான்கான் இருவரும் இணைந்து நடித்திருப்பதால் அதிகம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தநிலையில் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி இரண்டிற்குமான ஓடிடி உரிமை பிரபல நிறுவனம் ஒன்றால் 57 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆர்பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரொடக்சன் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சார்யா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதால் அதை தனியாக தயாரித்த சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அந்த இழப்பை காட்பாதர் வியாபாரமும் வசூலும் ஓரளவு ஈடுகட்டும் என தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.