'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து விக்ரம் நடித்த கோப்ரா படத்தையும் இயக்கினார். நீண்ட நாள் இந்த படம் தயாரிப்பில் இருந்தது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விக்ரம் பலவித வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் மீது விக்ரம் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இதற்காக தென்னிந்தியா முழுக்க சுற்றுப் பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தினார்.
அஜய் ஞானமுத்து மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த விக்ரம், பல மேடைகளில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் நடிப்பேன். அந்த படம் விரைவில் துவங்கும் என்று அறிவித்தார். இதற்காக விக்ரம் தயாரிப்பாளரையும் தயார் செய்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கோப்ரா எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதோடு கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. 3 ஹீரோயின்கள், ஏ.ஆர்.ரகுமான் இசை, விக்ரமின் நடிப்பு என பல பாசிட்டிவான விஷயங்கள் இருந்தும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால் விக்ரம், அஜய் ஞானமுத்துவுடன் இணைய இருந்த அடுத்த படத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்திலும், பா.ரஞ்சித் இயக்க விருக்கும் புதிய படத்திலும் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அஜய் ஞானமுத்துவும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கி இழந்த இமேஜை காப்பாற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். என்கிறார்கள்.