ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடித்து வருகிறவர் பிரியங்கா சோப்ரா. ஜக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல்லெண்ண தூதுவராக இருக்கிறார். இந்த நிலையில் ஐ.நா சபையில் நடந்த கூட்டத்தில் பிரியங்கா சோப்ரா உரையாற்றினார் அது வருமாறு:
உலகளாவிய ஒற்றுமை என்பது தற்போது முன்பைவிட அதிகமாக தேவைப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் பல நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. பருவநிலை மாற்றம், வாழ்வாதார பாதிப்பு, மோதல்கள், இயற்கைச் சீற்றம், வறுமை, இடப்பெயர்வு, பசி, சமூக ஏற்றத்தாழ்வு போன்றவை சமூகத்தின் அடித்தளத்தை அழிக்கின்றன.
இதிலிருந்து மீள்வதற்கு உலகம் நீண்ட காலமாக போராடி வருகிறது. உலகம் முழுவதிலும் தற்போது ஏற்பட்ட நெருக்கடி தற்செயலாக ஏற்படவில்லை. இந்த நெருக்கடியில் இருந்து மீள சரியான திட்டத்துடன் செயல்பட வேண்டும். உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க உலகம் இப்போது ஒற்றுமையோடு இருப்பது மிகவும் முக்கியம். என்றார்.
இந்த கூட்டத்தில் நோபல் பரிசு பெற்ற மலாலாவும் பேசினார். பிறகு பிரியங்காவும், மலாலாவும் தனியாக சந்தித்து பேசினார்கள்.