ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில் கனடா நாட்டுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு நாடு திரும்பிய ரஹ்மான், அடுத்தபடியாக 2023ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி மலேசியா நாட்டில் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த போகிறார். கோலாலம்பூர் புக்ரித் ஜெலீஸ் என்ற ஸ்டேடியத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. துவங்கிய 11 நிமிடத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.