'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக மணிரத்னம் இயக்கி உள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், கிஷோர், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சரித்திர படமாக உருவாகி உள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்.,30ல் வெளியாக உள்ளது. தற்போது படத்திற்கான புரொமோஷன் பணிகள் முழுவீச்சில் துவங்கி உள்ளனர்.
சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது பேசிய மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் 2 எப்போது வரும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இன்னும் 9 மாதங்களில் இரண்டாம் பாகம் ரிலீஸாகும் என்றார். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.