மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
காதல் பறவைகளாய் இருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் அடுத்து நடிகர் அஜித்தின் 62வது படத்தை இயக்க தயாராகி வருகிறார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் வெளிநாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு இன்று(செப்.,18) பிறந்தநாள். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு வரும் கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாக துபாயில் குடும்பத்தினர் உடன் கொண்டாடி உள்ளார் நயன்தாரா. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா முன் மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினர் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அதனுடன், ‛‛குடும்பத்தினரின் தூய்மையான அன்பால் நிறைந்த பிறந்தநாளாக எனக்கு இன்று அமைந்தது. என் தங்கமான மனைவி தந்த இன்ப ஆச்சரியமான பரிசு. குடும்பத்தினர் உடன் புர்ஜ் கலிபா முன் பிறந்தநாளை கொண்டாடினேன். இதைவிட சிறப்பாக பிறந்தநாளை கொண்டாட முடியாது. இறைவன் ஆசீர்வாதத்தால் அவர் தந்த அனைத்து அழகான தருணங்களுக்காக நன்றி சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.