நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! |
சின்னத்திரையில் டாப் நடிகை என பெயரெடுத்த ரச்சிதா மஹாலெட்சுமி தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ரச்சிதா திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் வீடியோவும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரக்சிதாவுக்கு விவாகரத்து நடந்துவிட்டதாகவும் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்து கொண்டதாகவும் செய்திகள் பரவின.
இதை பார்த்து கடுப்பான ரச்சிதா, திருமண கோலத்தில் இருக்கும் அந்த வீடியோவை ஷேர் செய்து, அது தான் நடித்து வரும் 'இது சொல்ல மறந்த கதை' தொடரில் இடம் பெற்றுள்ள காட்சி என விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த வீடியோவை வைத்து தவறான முறையில் வதந்திகளை பரப்பி வருபவர்களையும் கடுமையாக சாடியுள்ளார். ரச்சிதா அந்த பதிவில், 'இது வச்சு பொய்யான நியூஸ்லாம் பரப்ப வேண்டாம். நீங்க அட்டென்ஷன் கிரியேட் பன்றதுக்கு, நீங்க பணம் பன்றதுக்கு, உங்க போதைக்கு எங்கள (நடிகைகள) ஊறுகாய் ஆக்காதீங்க . எங்க பொழப்ப எங்கள நிம்மதியா பாக்க விடுங்க' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.