ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சின்னத்திரையில் டாப் நடிகை என பெயரெடுத்த ரச்சிதா மஹாலெட்சுமி தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ரச்சிதா திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் வீடியோவும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரக்சிதாவுக்கு விவாகரத்து நடந்துவிட்டதாகவும் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்து கொண்டதாகவும் செய்திகள் பரவின.
இதை பார்த்து கடுப்பான ரச்சிதா, திருமண கோலத்தில் இருக்கும் அந்த வீடியோவை ஷேர் செய்து, அது தான் நடித்து வரும் 'இது சொல்ல மறந்த கதை' தொடரில் இடம் பெற்றுள்ள காட்சி என விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த வீடியோவை வைத்து தவறான முறையில் வதந்திகளை பரப்பி வருபவர்களையும் கடுமையாக சாடியுள்ளார். ரச்சிதா அந்த பதிவில், 'இது வச்சு பொய்யான நியூஸ்லாம் பரப்ப வேண்டாம். நீங்க அட்டென்ஷன் கிரியேட் பன்றதுக்கு, நீங்க பணம் பன்றதுக்கு, உங்க போதைக்கு எங்கள (நடிகைகள) ஊறுகாய் ஆக்காதீங்க . எங்க பொழப்ப எங்கள நிம்மதியா பாக்க விடுங்க' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.