சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

சின்னத்திரையில் டாப் நடிகை என பெயரெடுத்த ரச்சிதா மஹாலெட்சுமி தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ரச்சிதா திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் வீடியோவும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரக்சிதாவுக்கு விவாகரத்து நடந்துவிட்டதாகவும் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்து கொண்டதாகவும் செய்திகள் பரவின.
இதை பார்த்து கடுப்பான ரச்சிதா, திருமண கோலத்தில் இருக்கும் அந்த வீடியோவை ஷேர் செய்து, அது தான் நடித்து வரும் 'இது சொல்ல மறந்த கதை' தொடரில் இடம் பெற்றுள்ள காட்சி என விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த வீடியோவை வைத்து தவறான முறையில் வதந்திகளை பரப்பி வருபவர்களையும் கடுமையாக சாடியுள்ளார். ரச்சிதா அந்த பதிவில், 'இது வச்சு பொய்யான நியூஸ்லாம் பரப்ப வேண்டாம். நீங்க அட்டென்ஷன் கிரியேட் பன்றதுக்கு, நீங்க பணம் பன்றதுக்கு, உங்க போதைக்கு எங்கள (நடிகைகள) ஊறுகாய் ஆக்காதீங்க . எங்க பொழப்ப எங்கள நிம்மதியா பாக்க விடுங்க' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.