விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

சீரியல் நடிகை மகாலட்சுமியும், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும், அவரது மனைவி ஜெயஸ்ரீக்கும் இடையில் பிரச்னை வருவதற்கு காரணமே மகாலட்சுமி தான் என கூறப்பட்டது. அப்போதே பெரும் விமர்சனத்துக்கு ஆளானார் மகாலட்சுமி.
இந்நிலையில் மகாலட்சுமி தற்போது ரவீந்தரை திருமணம் செய்ய காரணம் அவரிடம் இருக்கும் பணம் மட்டுமே என சிலர் தரைக்குறைவாக அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும், இவர்கள் திருமணத்தை கிண்டலடிப்பது போல் பல மீம்ஸ்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் மகாலட்சுமிக்கு ஆதரவாக காஜல் பசுபதி சோஷியல் மீடியாவில் பேசி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், 'அது எப்படிங்க, நயன்தாரா விக்னேஷ் சிவனை கட்டிக்கிட்டாலும் நயன்தாரா மேல தான் தப்பு. மகாலட்சுமி - ரவீந்தரை கட்டிக்கிட்டாலும் மகாலட்சுமி தான் தப்பு. என்ன ஒரு ஆம்பள புத்தில' என சமூகத்தின் மோசமான பார்வையை கேள்வி கேட்டு சூடு கொடுத்துள்ளார்.
காஜலை போலவே தற்போது பலரும் மகாலட்சுமி - ரவீந்தரின் வாழ்க்கை அவர்களது தனிப்பட்ட விருப்பம் அதில் தேவையற்ற கருத்துகளை கூற வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.