டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற தெலுங்குப் படம் 'புஷ்பா'. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி இங்கு 25 கோடிக்கும் மேல் வசூலித்து லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது.
இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக சிறப்பாக உருவாக்க வேண்டும் என கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக திரைக்கதையை எழுதி வந்தனர். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று(ஆக., 22) இப்படத்தின் பூஜை நடைபெறும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அமெரிக்காவில் இருப்பதாலும், கதாநாயகி ராஷ்மிகா வேறு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை. இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இடையிலான மோதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'இரண்டாம் பாகத்திற்கு 'புஷ்பா - த ரூல்' என பெயர் வைத்துள்ளார்கள்.