25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
காதல் செய்த சமயங்களில் சுற்றுலா சென்ற புகைப்படங்களைப் பதிவிட்டு பல இளைஞர்களை ஏங்க வைத்தது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி. சரி, திருமணமான பின்பாவது அப்படி புகைப்படங்களைப் பதிவிடாமல் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் இப்போதும் தொடர்கிறார்கள். தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இடைவிடாமல் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இயக்குனரும், சில காதல் பாடல்களை எழுதியவருமான விக்னேஷ் சிவனின் நயன்தாரா பற்றிய கவிதை வரிகள் இப்போதும் தொடர்வதில் ஆச்சரியமில்லை தான். ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பழமையான வாலேன்சியா நகரில் தற்காலக் கட்டிடங்கள் முன்பாக நயன்தாரா எடுத்த சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அவற்றோடு, “நீ என் உலக அழகியே, உன்னைப் போல் ஒருத்தி இல்லையே… என் உலக அழகியும், இவ்வுலகின் அழகும், இந்தியாவிலிருந்து வந்துள்ள அழகானப் பெண் நயன்தாரா..இதுவரை சென்ற இடங்களில் மிகச் சிறந்த இடம்,” எனப் பதிவிட்டுள்ளார்.