பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக நடித்தவர் ஆத்மிகா. அதைத்தொடர்ந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்து ரசிகர்களிடம் சற்று பிரபலமானார். மூன்று நாயகிகளில் ஒருவராக இவர் நடித்துள்ள காட்டேரி என்கிற திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவர் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று சோசியல் மீடியாவில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
இவர் பதிவிட்டுள்ளதாவது : ‛‛சலுகை பெற்றவர்கள் ஏணியில் ஏறுவதற்கு எளிதாக வழி கிடைப்பதை பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. பாத்துக்கலாம்'' என்று கூறியுள்ளார்.
இதை பார்க்கும்போது தமிழ் சினிமாவில் நிலவிவரும் நெப்போடிசம் குறித்து இவர் குறிப்பிட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. அதேசமயம் வாரிசு நட்சத்திரங்களுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைப்பதை மறைமுகமாக இவர் குறிப்பிட்டுள்ளார் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.




