சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு |
ஆமீர்கான் நடித்துள்ள ‛லால் சிங் சத்தா' படம் அடுத்தவாரம் வெளியாகிறது. ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் என்ற படத்தின் ரீ-மேக் இது. இந்த படத்தை புறக்கணியுங்கள் என்ற குரல் எழுந்துள்ளது. தனது படத்தை புறக்கணிக்காதீர்கள், எனது படத்தை எல்லோரும் பாருங்கள் என கூறினார் ஆமீர்கான். இந்நிலையில் இந்த படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு வேண்டுமென்று பப்ளிசிட்டிக்காக உருவாக்கியது போல் உள்ளது என கங்கனா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி கங்கனா கூறுகையில், ‛‛லால் சிங் சத்தா படத்தை சுற்றி எழுந்துள்ள எதிர்மறை விஷயங்களுக்கு பின்னணியில் ஆமீர்கானே இருக்கலாம். இந்தாண்டு தென்னிந்திய படங்கள் தவிர்த்து எந்த ஹிந்தி படமும் எடுபடவில்லை. ஹாலிவுட் ரீமேக் எப்படியும் வேலை செய்யாது. ஆனால் இப்போது அவர்கள் இந்தியாவை சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று கூறுவார்கள். இங்கு இந்துவோ, முஸ்லீமோ கிடையாது. பார்வையாளர்களின் ரசனையை ஹிந்தி சினிமா புரிந்து கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்று கூறிய ஆமீர்கானே இந்துக்களுக்கு எதிரான ‛பிகே' எனும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார். ஆகவே தயவு செய்து மதம் அல்லது சித்தாந்தம் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். மோசமான படங்கள், மோசமான நடிப்பில் இருந்து இது திசை திருப்பும் செயல்'' என்கிறார்.