ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

மலையாள திரையுலகில் மிகப்பிரமாண்டமான உருவான வரலாற்று படங்களான பழசிராஜா மற்றும் மரைக்கார் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு துவங்கி இரண்டு வருட காலகட்டத்திலேயே மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டனர். ஆனால் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் உருவாகி வந்த ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை எட்டிய நிலையில் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நஜீப் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் நடித்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.
இந்த படத்தின் கதை கேரளா மற்றும் அரபு நாடியில் உள்ள பாலைவன பகுதிகளில் விதவிதமான காலகட்டங்களில் நடைபெறும் விதமாக எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பிரித்விராஜுக்கும் வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க வேண்டி இருந்தது. அப்படி இடைவெளி விட்டுவிட்டு நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜோர்டன் நாட்டில் நடைபெற்றபோது கொரோனா தாக்கம் காரணமாக மீண்டும் தடங்கலை சந்தித்தது.
இந்த நிலையில் இந்த வருட துவக்கத்தில் மீண்டும் ஜோர்தான் சென்று மீதி காட்சிகளை படமாக்கி திரும்பிய ஆடுஜீவிதம் படக்குழுவினர் சமீபத்தில் கேரளாவில் உள்ள ராணி என்கிற பகுதியில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், 14 வருடங்களாக இந்த கதையில் பயணித்து, ஐந்து வருடங்களாக படப்பிடிப்பில் கடுமையான உழைப்பை கொடுத்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, ஒரே நோக்கில் இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி முடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் நடிகர் பிரித்விராஜ்.