லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே. நாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் சிரஞ்சீவியை 'அரசியல் புரோக்கர்' என்று விமர்சித்திருந்தார். இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி ரசிகர் மன்றத்தினரும், தெலுங்கு திரையுலகமும் நாராயணாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது. பல இடங்களில் சிரஞ்சீவி ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் தனது கருத்தை வாபஸ் பெற்றதோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் நாராயணா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியல் தலைவர்கள் போட்டியாளர்களை விமர்சிப்பது சகஜம். எனது சமீபத்திய கருத்துக்களால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் மற்றும் கபு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் புண்பட்டுள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஆனாலும் , நான் மொழியின் வரம்புகளைத் தாண்டியிருக்கக் கூடாது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.