இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

தமிழில் மண்ணுக்குள் வைரம், பூந்தோட்டக் காவல்காரன், தாய்மேல் ஆணை, இதயத் திருடன் உட்பட பல படங்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மலையாளியான இவர் மலையாள நடிகர் பாபுராஜை திருமணம் செய்து கொண்டார். பாபுராஜ் தமிழில் ஜனா, ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் வசித்து வரும் இவர்கள் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2018ம் ஆண்டு கூடாஷா என்ற படத்தை தயாரித்தனர். படத் தயாரிப்புக்காக கேரள மாநிலம் திருவில்வமலா என்ற பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் ரூ.3.14 கோடியை கடனாக பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக கணவன், மனைவி இருவர் மீது ரியாஸ் ஒட்டப்பாலம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.




