சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
தமிழில் மண்ணுக்குள் வைரம், பூந்தோட்டக் காவல்காரன், தாய்மேல் ஆணை, இதயத் திருடன் உட்பட பல படங்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மலையாளியான இவர் மலையாள நடிகர் பாபுராஜை திருமணம் செய்து கொண்டார். பாபுராஜ் தமிழில் ஜனா, ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் வசித்து வரும் இவர்கள் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2018ம் ஆண்டு கூடாஷா என்ற படத்தை தயாரித்தனர். படத் தயாரிப்புக்காக கேரள மாநிலம் திருவில்வமலா என்ற பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் ரூ.3.14 கோடியை கடனாக பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக கணவன், மனைவி இருவர் மீது ரியாஸ் ஒட்டப்பாலம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.