இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர் பீஸ், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட், காயங்குளம் கொச்சுன்னி, நந்தனம் உட்பட 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தவர் பாபுராஜ் வாழப்பள்ளி. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.
59 வயதான இவர் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மறைந்த பாபுராஜ் வாழப்பள்ளிக்கு சந்தியா என்ற மனைவியும் பிஷால் என்ற மகனும் உள்ளனர். பாபுராஜ் வாழப்பள்ளி மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.