20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தமிழ், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். இவர் மலையாள நடிகர் பாபுராஜை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வருகிறார். இருவரும் இணைந்து சில படங்களை தயாரித்தார்கள். படம் தயாரிக்க வாங்கிய 3 கோடி ரூபாய் கடனை திருப்பித் தரவில்லை என்று ரியாஸ் என்பவர் இவர்கள் மிது ஒட்டப்பாலம் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து பாபுராஜ் அளித்துள்ள விளக்கம் வருமாறு : எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. படத்துக்கும், என் மனைவி வாணி விஸ்வநாத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சில பிரச்சினைகள் இருந்ததால் எனது பட தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுமாறு கோரினர். அந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்கவில்லை. படக்குழுவினருக்கான உணவு மற்றும் தங்குமிடம் எனது ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான பணத்தை படம் வெளியானதும் தருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்து விட்டது. புகாரை சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு பாபுராஜ் விளக்கம் அளித்துள்ளார்.