இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் |
சரத்குமார் நடித்த அரசு, சத்ரபதி, விக்ராந்த் நடித்த நினைத்து நினைத்து பார்த்தேன் உள்பட பல படங்களை தயாரித்தவர் பாபுராஜா. சூப்பர்குட் பிலிம்சில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். கடைசியாக திருப்பதிசாமி குடும்பம் என்ற படத்தை தயாரித்தார்.
53 வயதான பாபுராஜா கடந்த சில வருடங்களாகவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
பாபுராஜாவின் இயற்பெயர் பாபா பக்ருதீன். அவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும் ஜாவீத் அஷ்ரப், ஜாகின் அஷ்ரப், ஜாபர் அஷ்ரப் என்ற மகன்களும் உள்ளனர்.