இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு பெப்சி தொழிலாளர்களை அழைத்துச் சென்றால் வெளியூர்களில் வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த நாளுக்குரிய சம்பளத்தையும், பேட்டாவையும் வழங்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள வழக்கம்.
தற்போது கொரோனா 2வது அலை காரணமாக வெளியூரில் படப்பிடிப்பு நடக்கும் பல படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரங்கு, உரிய இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல். இவற்றால் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.
இதனால் படப்பிடிப்பு நடக்காத நாட்களில் பெப்சி ஊழியர்களுக்கு எங்களால் சம்பளம் வழங்க இயலவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்றுக் கொண்ட பெப்சி வேலை இல்லாத நாட்களுக்கு தயாரிப்பாளரிடமிருந்து சம்பளம் பெற வேண்டாம் என்று அனைத்து திரைப்பட சங்கங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.