காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

பொதுவாகவே நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராக மாறுவதுண்டு. ஆனால் ஆடியோகிராபர்கள் (ஒலிப்பதிவாளர்கள்) இயக்குனராவது அபூர்வமானது. சமீத்திய உதாரணமாக ரசூல் பூக்குட்டியை சொல்லலாம். ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனரான ஒலிப்பதிவாளர் வி.எஸ்.ராகவன் (நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல).
பிரபல ஆங்கில ஒலிப்பதிவாளர் சி.இ.பிக்ஸ் என்பவரிடம் தொழில்கற்று ஏவிஎம் நிறுவனத்தில் தலைமை ஒலிப்பதிவாளராக பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த இவர் பின்னர் ரேவதி புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தார். 'மனிதனும் மிருகமும், மேதாவிகள்' படங்களை தயாரித்தார், 'கள்வனின் காதலி, சமய சஞ்சீவி, சாரங்கதாரா, மணிமேகலை, சந்திரிகா' ஆகிய படங்களை இயக்கினார்.
பின்னர் தயாரிப்பு, இயக்கம் இரண்டும் தனக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதை உணர்ந்து கடைசி வரை தனது ரேவதி ஸ்டூடியோவை மட்டும் நடத்தி வந்தார். ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்தார், நடிகை ஆர்.பத்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.




