ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு அஜித்குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. அஜித்தின் 64வது படமாக உருவாக உள்ள இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஆதிக் ஏற்கெனவே சில முறை அப்டேட்களைக் கொடுத்துள்ளார்.
இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூட தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. இப்படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளதாகச் சொன்னார்கள்.
ஆனால், தற்போது அஜித்தின் சம்பள விவகாரத்தால் இழுபறி நீடிக்கிறது என்றும் டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் முந்தைய படமான 'குட் பேட் அக்லி' படம் 250 கோடி வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகின.
அதற்கேற்றபடி தான் அஜித் 64 படத்தின் பட்ஜெட்டை முடிவு செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னாராம். சம்பள விவகாரத்தில் அஜித் கறாராக நடந்து கொள்ள மாட்டார் என்பது கோலிவுட் தகவல். இப்படியிருக்கையில் அஜித் 64 குறித்து தற்போது திடீரென இப்படி ஒரு தகவல் வருவது ஆச்சரியமாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்.