நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சென்னையில் இன்று நடந்த பிளாக் மெயில் பட விழாவில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன். காரணம், படத்தில் ஹீரோவாக நடித்தவர் அவர் நண்பர் ஜி.வி.பிரகாஷ். கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கி இருக்கிறார்.
படவிழாவில் ஆதிக் பேசுகையில் ''என்னை திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ். பல ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்கிறது. இந்த படத்தின் கதை வித்தியாசமானது. இந்த பட இயக்குனர் மாறன் இரவு காட்சிகளை அதிகம் ரசித்து எடுப்பவர். ஆனால், ஹீரோ ஜி.வி.பிரகாசுக்கு இரவு பிடிக்காது. அவர் லைட் போட்டுக் கொண்டுதான் துாங்குவார். அவர் இந்த படத்துக்குபின் மாறியிருப்பார் என நினைக்கிறேன் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் ''அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்குவது உறுதி. அது குட் பேட் அக்லி மாதிரி இருக்காது, வேறு ஜானரில் இருக்கும். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு , அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும்' என்றார்.
ஹீரோயின், தயாரிப்பாளர் குறித்து ஆதிக் சொல்லவில்லை. ஆனாலும், ரோமியோ பிக்சர் ராகுல் தயாரிப்பதாக கூறப்படுகிறது.