திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

'சேது' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் அபிதா. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார். திடீரென சினிமாவை விட்டு விலகினார். சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் குறித்து அவர் மீடியாக்களிடம் பேசி வருகிறார். அப்போது அவரிடம் ராமராஜன், நளினி பிரிவுக்கு காரணம் நீங்கள்தான் என்ற செய்திகள் வெளியானது குறித்து அவரிடம் கேட்டபோது, “அப்போது பரவிய இந்த தகவலால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். தினமும் அழுதபடி இருப்பேன். ராமராஜன் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றெல்லாம் வதந்தி கிளப்பினார்கள். அது உண்மையென்றால் அப்போதே நடந்திருக்க வேண்டுமே. அப்படி எதுவும் நடக்கவில்லை. காரணம், அது பொய்யான தகவல். எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தார் எனக்கு ஆதரவாக நின்றார்கள். அதனால்தான் அந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு வந்தேன்” என்று கூறியுள்ளார்.
ராமராஜன், நளினி தம்பதி கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களது விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் ஒன்றுதான், ராமராஜன், அபிதா காதல். இருவரும் காதலிப்பதாலேயே நளினியை ராமராஜன் பிரிந்துவிட்டார் என்றும் பேசப்பட்டது. அப்போது இது பற்றி எதுவும் பேசாத அபிதா, 26ஆண்டுகள் கழித்து இப்போது பேசியிருக்கிறார்.




