'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயராகும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா ஹீரோயின். பகத் பாசில் வில்லன். இவர்கள் தவிர ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடிக்கிறார்கள். சுகுமார் இயக்குகிறார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி ரசிகர்களுடன் வீடியோ சாட்டில் பேசினார் ராஷ்மிகா. அப்போது அவர் கூறியதாவது: புஷ்பா மிகவும் நன்றாக வளர்ந்து வருகிறது. மும்முரமாக, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான முறையில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன, படத்தை நீங்கள் அனைவரும் மிகவும் ரசிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
சுகுமார் இயக்கம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு, அல்லு அர்ஜுன் கதாநாயகன். இதை விட வேறென்ன வேண்டும் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு?. என்றார். அல்லு அர்ஜூன் எப்படிபட்டவர் உங்கள் அனுபவம் எப்படி என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "அல்லு அர்ஜூன் மிகவும் எளிமையானவர், இனிமையானவர்" என்றார்.
இவ்வாறு ராஷ்மிகா தெரிவித்துள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.




