பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கமலின், விஸ்வரூபம் படத்தின் தடையால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.30 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தடை தொடர்ந்தால் மேலும் இது அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. கமல்ஹாசனின் பிரம்மாண்ட நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இப்படம் கடந்த வாரம் 25ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினரின் எதிர்ப்பால், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை இரண்டு வாரகாலத்திற்கு தடை செய்தது தமிழக அரசு. இதனால் தமிழகம், புதுவை தவிர்த்து இந்தியாவின் பிறமாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இப்படம் ரிலீஸ் ஆனது. இதேபோல் அமெரிக்கா, மலேசியா, போன்ற நாடுகளிலும் இப்படம் ரிலீசானது.
பிறமாநிலங்களிலும் தடை : கேரளாவில் சுமார் 80 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 100 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 40 தியேட்டர்களிலும் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன முதல்நாள் மட்டுமே பெரும்பாலன தியேட்டர்களில் இப்படம் ஓடியது. ஆனால் அதன்பிறகு இப்படத்திற்கு அம்மாநிலங்களில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தை போல பிறமாநிலங்களிலும் இப்படத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தமட்டில் கேரளாவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவிலும் தடை : மலேசியாவிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் ஆன முதல்நாளுக்கு பிறகு படத்தை பார்த்த அங்குள்ள முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படத்தை தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு.
ரூ.30 கோடி இழப்பு : விஸ்வரூபம் படத்தை திரையிட முடியாததால் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.30 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பையை சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர் ராஜேஸ் தடானி கூறியுள்ளதாவது, கடந்த 3 நாட்களில் இந்த படம் முடக்கம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தடை நீடித்தால் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என்றார். இதே கருத்தை ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் உள்ள விநியோகஸ்தர்களும் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் ரூ.57 லட்சம் வசூல் : அதேசமயம் இங்கிலாந்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிடப்பட்ட நாளில் இருந்து இதுநாள் வரை அதாவது 3நாளில் சுமார் ரூ.57 லட்சம் வசூல் செய்துள்ளது.