நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல பாடலும் வைரலாக பரவியது. இந்த பாடலை பார்வையற்ற மாற்றத்திறனாளியான திருமூர்த்தி என்பவர் பாடி அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆனது. இந்த நிலையில் திருமூர்த்தியை தனது ஆழ்வார்பேட்டை அலுவலத்திற்கு அழைத்த கமல்ஹாசன் அவரை பாராட்டினார்.
அப்போது திருமூர்த்தி முறையாக இசை கற்று இசை கலைஞன் ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை கமலிடம் தெரிவித்தார். அப்போது கமல் ஏ.ஆர்.ரகுமானுடன் தொடர்பு கொண்டு அவரது கே.எம்.மியூசிக் அகாடமியில் திருமூர்த்திக்கு இசை பயிற்சி அளிக்குமாறும், அதற்கான செலவை தான் ஏற்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்றுக் கொண்டார்.
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி பலரின் கவனத்தை ஈர்த்தார் திருமூர்த்தி. அந்த படத்திற்கு இசையமைத்த இமான், தனது படங்களில் ஓரிரு பாடல்களை அவரை பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.