'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல பாடலும் வைரலாக பரவியது. இந்த பாடலை பார்வையற்ற மாற்றத்திறனாளியான திருமூர்த்தி என்பவர் பாடி அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆனது. இந்த நிலையில் திருமூர்த்தியை தனது ஆழ்வார்பேட்டை அலுவலத்திற்கு அழைத்த கமல்ஹாசன் அவரை பாராட்டினார்.
அப்போது திருமூர்த்தி முறையாக இசை கற்று இசை கலைஞன் ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை கமலிடம் தெரிவித்தார். அப்போது கமல் ஏ.ஆர்.ரகுமானுடன் தொடர்பு கொண்டு அவரது கே.எம்.மியூசிக் அகாடமியில் திருமூர்த்திக்கு இசை பயிற்சி அளிக்குமாறும், அதற்கான செலவை தான் ஏற்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்றுக் கொண்டார்.
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி பலரின் கவனத்தை ஈர்த்தார் திருமூர்த்தி. அந்த படத்திற்கு இசையமைத்த இமான், தனது படங்களில் ஓரிரு பாடல்களை அவரை பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.