பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

பா.ரஞ்சித்தின் கடைசியாக இயக்கிய 'சார்பட்டா' திரைப்படம் வரவேற்பை பெற்றது . தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை குறுகிய காலத்தில் இயக்கியுள்ளார் . இதில் அசோக் செல்வன் , காளிதாஸ் ஜெயராம் , துஷாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் ரஞ்சித். 'பாடி பில்டிங்கை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'மைதானம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் பிரம்மாண்டமாக 3டி வெர்ஷனில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.