மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் 'உலகம் உங்கள் கையில்' என்ற தலைப்பில் 10 லட்சம் மடிக்கணினிகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசியதாவது:
அடுத்த தலைமுறைகளுக்கு வேறு எதையும் கொடுப்பதைவிட கல்வியை கொடுப்பது மிகவும் அவசியம். ஒருவருக்கு கல்வி கிடைப்பதினால் அந்த தலைமுறை, அவர் குடும்பம், அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து போகிறார்கள்.
ஒருவருக்கு அவரின் வளர்ச்சி என்பது அவருக்கு கிடைக்கக்கூடிய அறிவு மூலமாக தான் முன்னேறி போகிறார்.
அதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும், அதனை உடைத்தெறிந்து முன்னால் நகர்த்தி போவதில் பெரும் பங்கை முதல்-அமைச்சர் வகிக்கிறார். அதற்கு நான் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த திட்டத்தில் பலன் அடையும் அனைவருக்கும் வாழ்த்துகள். என்றார்.