குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? |
கமல் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு முதலில் தியேட்டர்காரர்கள் டிடிஎச்சில் ஒளிபரப்ப கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். முதலில் தியேட்டரில் வெளியிடலாம் என்று முடிவு செய்தபோது டிடிஎச் அதிபர்கள் நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம் என்றார்கள். அதன்பிறகு இரு தரப்பையும் ஒருவாறு சமாளித்து திரையிட ஏற்பாடு செய்தபோது இஸ்லாமிய அமைப்புகள் பிரச்சினையை கிளப்பியது. ஏற்கெனவே படம் பார்த்து விட்டு திருப்தி என சொல்லிவிட்டு பிறகு திடீரென சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசு வேறு வழியின்றி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க படத்துக்கு 15 நாள் தடை விதித்தது. இவ்வளவு நடக்கும்போதும் இதுகுறித்து எந்த கருத்தும் சொல்லாமல், தங்கள் நிலைப்பாட்டை சொல்லாமல், தன் சங்க உறுப்பினர் கமலுக்கு துணையாக நில்லாமல் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம் இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
அந்த அறிக்கை வருமாறு: திரைப்படங்கள் மக்கள் பார்வைக்கு உகந்ததா, இல்லையா என்பதை தீர்மானிக்க மத்திய அரசு தணிக்கை குழு அமைத்திருக்கிறது. இந்த குழு எந்தத் திரைப்படமாக இருந்தாலும் அது சமூகத்தின் ஏதாவது ஒரு பிரிவினரின் மன உணர்வுகளையாவது பாதிக்கிறதா என்று துல்லியமாக விழிப்புணர்வுடன் இருந்து தணிக்கை செய்ய வேண்டும். அப்படி தணிக்கை செய்யப்பட்ட பிறகு அந்தப் படம சமூகத்தில் ஒரு பிரிவினரை பாதிப்பதாக கருத்து பரவி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கிற அளவுக்கு பிரச்னை எழும்போது அப்படம் திரையிடப்படுவதை தள்ளிவைக்கும் சூழ்நிலை அரசுக்கு ஏற்படுகிறது.
ஆகவே கமல்ஹாசன் தயாரித்து நடித்து வெளியாகி இருகும் விஸ்வரூபம் திரைப்படத்தினால் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாட்டினை தமிழக முதல்வர் தனது வேலைப்பளுவிற்கு இடையே மன வருத்தத்தில் உள்ள தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அவர்களின் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினரையும், கமல்ஹாசனையும் அழைத்துப் பேசி சுமுகமான தீர்வினை விரைவில் ஏற்படுத்தித் தருமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.