மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான் படம் ‛சந்திரமுகி'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாகவும், அதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் அறிவித்தார் பி.வாசு. படத்திற்கான முன் பணிகள் நடைபெற்று வந்தன. அதோடு மற்ற நடிகர்கள் தேர்வும் நடந்து வருகிறது. இந்த படத்தின் கதை சந்திரமுகி முதல் பாகம் படத்தின் தொடர்ச்சி கிடையாது. முற்றிலும் புதிய கதையில் தயாராகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக கீரவாணி எனும் எம்எம்.மரகதமணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இவர் பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழிலும் நீ பாதி நான் பாதி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.