ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
தமிழில் பண்ணையாரும் பத்மினியும், ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்ற இவர், விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு உயர்ந்தார். சமீபத்தில் மலையாளத்தில் பஹத் பாஸில் நடிப்பில் வெளியான பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜஸ்டின் பிரபாகரன்.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி எனும் மரகதமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜஸ்டின் பிரபாகரன் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். மேலும் விஜய் தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட் என்கிற படத்தில் இடம்பெற்ற காதலே என்கிற பாடல் தன் மனதுக்கு மிக நெருக்கமான பாடல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பாச்சுவும் அற்புத விளக்கும் படத்திலும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை சிறப்பான பங்கு வகித்தது என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். “மூத்த இசையமைப்பாளரும் மிகப்பெரிய ஜாம்பவானுமான உங்களிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைப்பது என்னை மென்மேலும் சிறப்பாக பயணிக்க உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கிறது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.