என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள் | படுத்தே விட்டானய்யா மொமண்ட் : கமலை கடுமையாக கலாய்த்த நடிகை கஸ்தூரி | இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ் | நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ் | உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் |
தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனர் ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளருமான மரகதமணி, தமிழில் எம்.எம்.கீரவாணி என்கிற பெயரிலும் இசையமைத்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இவரது இசையில் சூப்பர் ஹிட்டான நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த வருடம் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தற்போது சந்திரமுகி 2 மற்றும் ஜென்டில்மேன் 2 என இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு இசையமைக்கிறார் மரகதமணி.
இதில் ஜென்டில்மேன் 2 படத்தின் பாடல் கம்போசிங் தற்போது கேரளாவில் கொச்சியில் உள்ள போல்காட்டி பேலஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளா வருகை தந்த இசையமைப்பாளர் மரகதமணி தான் வரும்போது தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கென கையோடு நான்கு வரிகளில் ஒரு வாழ்த்துப் பாடலையும் உருவாக்கி எடுத்து வந்திருந்தார்.
கொச்சியில் தன்னை கே.டி.குஞ்சுமோன் வரவேற்றபோது கேரளாவில் உள்ள சில கோரஸ் இசைக்கலைஞர்களை வைத்து தான் கொண்டு வந்த பாடலை இசைக்க வைத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மரகதமணி.