சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
90களில் பிரம்மாண்ட படங்களை தயாரித்து மெகா தயாரிப்பாளர் என அழைக்கப்பட்டவர் கே.டி குஞ்சுமோன். இயக்குனர் ஷங்கரை ஜென்டில்மேன் திரைப்படம் மூலமாக அறிமுகப்படுத்தியவர். சரத்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், கதிர், அப்பாஸ், வினீத் என பல கலைஞர்களின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜென்டில்மேன்-2 படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார். ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் புகழ் கீரவாணி இசை அமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசும்போது கே.டி குஞ்சுமோன் யாரும் அறியாத தகவல் ஒன்றை வெளியிட்டார்.
அவர் பேசியதாவது: “பெரும்பாலும் பிரபலமான கலைஞர்களை வைத்து படம் எடுப்பதை விட வளரும் கலைஞர்களை வைத்து படம் எடுப்பது தான் என் டெக்னிக். ஜென்டில்மேன் துவங்கிய போது அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று ஷங்கர் கூறினார். நானும் இளையராஜாவின் பக்தன் தான். ஆனாலும் அந்த சமயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வளர்ந்து வந்தார். ரோஜா படத்தின் மூலம் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் அவரை வைத்து இசையமைக்கலாம் என்று கூறினேன். ஷங்கரும் அரை மனதாக ஒப்புக் கொண்டுதான் படத்தை இயக்கினார். ஆனால் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது” என்று கூறினார்.
தனது முதல் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என விரும்பிய ஷங்கர், ஜென்டில்மேன் படத்தின் பாடல்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், அதன்பிறகு தங்களுக்குள் ஏற்பட்ட நட்பால் தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானுடனேயே பயணிக்க ஆரம்பித்து விட்டதும் மீண்டும் இளையராஜா பக்கம் திரும்பியே பார்க்காததும் ஆச்சரியமான விஷயம் தான்.