பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
90களில் பிரம்மாண்ட படங்களை தயாரித்து மெகா தயாரிப்பாளர் என அழைக்கப்பட்டவர் கே.டி குஞ்சுமோன். இயக்குனர் ஷங்கரை ஜென்டில்மேன் திரைப்படம் மூலமாக அறிமுகப்படுத்தியவர். சரத்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், கதிர், அப்பாஸ், வினீத் என பல கலைஞர்களின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜென்டில்மேன்-2 படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார். ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் புகழ் கீரவாணி இசை அமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசும்போது கே.டி குஞ்சுமோன் யாரும் அறியாத தகவல் ஒன்றை வெளியிட்டார்.
அவர் பேசியதாவது: “பெரும்பாலும் பிரபலமான கலைஞர்களை வைத்து படம் எடுப்பதை விட வளரும் கலைஞர்களை வைத்து படம் எடுப்பது தான் என் டெக்னிக். ஜென்டில்மேன் துவங்கிய போது அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று ஷங்கர் கூறினார். நானும் இளையராஜாவின் பக்தன் தான். ஆனாலும் அந்த சமயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வளர்ந்து வந்தார். ரோஜா படத்தின் மூலம் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் அவரை வைத்து இசையமைக்கலாம் என்று கூறினேன். ஷங்கரும் அரை மனதாக ஒப்புக் கொண்டுதான் படத்தை இயக்கினார். ஆனால் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது” என்று கூறினார்.
தனது முதல் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என விரும்பிய ஷங்கர், ஜென்டில்மேன் படத்தின் பாடல்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், அதன்பிறகு தங்களுக்குள் ஏற்பட்ட நட்பால் தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானுடனேயே பயணிக்க ஆரம்பித்து விட்டதும் மீண்டும் இளையராஜா பக்கம் திரும்பியே பார்க்காததும் ஆச்சரியமான விஷயம் தான்.