தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளார்கள். ஆனால் இந்த நேரத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை அவர் இரண்டாவது திருமணம் செய்திருப்பதோடு, அவரை விட்டு பிரிந்துள்ளார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீசில் புகார் அளித்தார் ஜாய் கிரிசில்டா.
இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், கருவிலே உயிர் உருவாகும் போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க, நீ வெளியே தப்பிக்கிறாய். இதுதானா உன் அன்பு அறிமுகம் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் ஜாய் கிரிசில்டா.