அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

இந்திய திரையுலகம் கொண்டாடும் இசை மேதை இசையமைப்பாளர் இளையராஜா (வயது 82). 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை கடந்துள்ளார். அதோடு லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றி நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 13) ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கங்கை அமரன் போன்ற இளையராஜா குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
ராஜாவின் இசை மழை... முதல்வர் தேர்வு செய்த பாடல்கள்
இளையராஜாவின் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு பாராட்டு விழா துவங்கியது. ‛அமுதே தமிழே...' என்ற பாடல் முதலில் பாடப்பட்டது. இந்த பாடலை இளையராஜாவும் அவரது குழுவினரும் பாடினர். தொடர்ந்து ‛‛ராக்கம்மா கைய தட்டு..., செந்தூரப்பூவே..., அந்தி மழை பொழிகிறது..., சின்னத்தாய் அவள்..., உன்ன நினைச்சு..., ராஜா கைய வச்சா..., காதலின் தீபம் ஒன்று..., மாறுகோ மாறுகோ...'' உள்ளிட்ட பல பாடல்கள் மேடையில் நேரலையில் பாடி, இசையமைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் இளையராஜாவின் இன்னிசை மழையை ரசித்தனர். முன்னதாக இந்த மேடையில் பாடிய பாடல்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்ததாக விழாவில் கமல் தெரிவித்தார்.
சிம்பொனி இசை
இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசையும் இசைக்கப்பட்டது. இது ரசிகர்களை மேலும் இன்னிசை மழையில் நனையவிட்டது.