மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து கடந்த 2014ல் தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்து இன்றுடன் (ஜூன் 2) 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் தெலுங்கானா மாநிலத்துக்கான ஒரு பாடலை உருவாக்கும் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணியிடம் ஒப்படைத்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. ‛ஜெய ஜெய ஹே தெலுங்கானா' என்று துவங்கும் இந்த பாடலை ஆண்டே ஸ்ரீ என்பவர் எழுதியுள்ளார். அதே சமயம் இந்த பாடலுக்கு இசையமைக்க கீரவாணியை ஒப்பந்தம் செய்தது குறித்து தெலுங்கானா சினிமா இசையமைப்பாளர்கள் சங்கம் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பெல்லப்பள்ளி மோகன் கூறும்போது, “தெலுங்கானா ஆந்தம் என்பது நம்முடைய உரிமை. பல போராட்டங்கள், சண்டைகளுக்கு இடையே இந்த மாநிலத்தை நாம் பெற்றோம். இந்த பயணத்தை நாம் கண்கூடாக பார்த்து வந்திருக்கிறோம். தெலுங்கானாவை சேர்ந்தவர் அல்லாத இசையமைப்பாளரான கீரவாணி இந்த விஷயங்களை புரிந்து கொண்டு இசையமைப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் இருக்கும் கோவூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிகிறது.