என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள் | படுத்தே விட்டானய்யா மொமண்ட் : கமலை கடுமையாக கலாய்த்த நடிகை கஸ்தூரி | இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ் | நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ் | உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் |
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி தெலுங்கில் கீரவாணி என்கிற பெயரிலும் தமிழில் மரகதமணி என்கிற பெயரிலும் இசை அமைத்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் ராஜமவுலியுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணி அமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். கடந்தாண்டு இவரது இசையில் வெளியான ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் பெற்றார். இவரது மகன்களில் ஒருவரான ஸ்ரீசிம்ஹா இளம் கதாநாயகனாகவும், இன்னொரு மகன் காலபைரவா இசையமைப்பாளராகவும் வலம் வருகின்றனர்.
தற்போது இந்த சகோதரர்களின் கூட்டணியில் 'பாக் சாலே' என்கிற படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரனீத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார் சிரஞ்சீவி.
மேலும், “ஸ்ரீ சிம்ஹா தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமாகும் வரை அவர் மரகதமணியின் மகன் என்பதே எனக்கு தெரியாது.. அந்த அளவிற்கு தான் ஒரு பிரபலத்தின் மகன் என்பதை வெளிப்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் முன்னேறி வருகிறார். அவரது சகோதரர் காலபைரவாவும் இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.