'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட சிலர் வதந்திகளை உண்மைகள் போல பரப்புவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். சினிமா பிரபலங்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னதாக இவர்களே அவர்கள் இறந்து விட்டதாக தகவலை பரப்புவார்கள். உயிருடன் திடகாத்திரமாக இருக்கும் நபர்களுக்கு கூட அடிக்கடி இது நடக்கும். அந்த வகையில் பிரபல மலையாள டிவி நடிகரான டி.எஸ் ராஜு என்பவர் இறந்து விட்டதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் வதந்தி ஒன்று உண்மை செய்தி போல பரவியது.
மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் அஜு வர்கீஸ் இதை உண்மை என்று நம்பி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். பின்னர் தான் இது வதந்தி என தெரிய வந்ததும் உடனே அதை டெலீட் செய்துவிட்ட அஜு வர்கீஸ் சம்பந்தப்பட்ட நடிகரிடம் சோசியல் மீடியா மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது வருத்தங்களை தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குறிப்பாக மீடியாக்கள் முன்பாகவே நடிகர் டி.எஸ் ராஜுவுக்கு போன் செய்த அஜு வர்கீஸ் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
சோசியல் மீடியாவில் வெளியான அவரது இறப்பு செய்தி அந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது போன்று இருந்ததால் அதை உண்மை என நம்பிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் அஜு வர்கீஸ். இந்த வதந்தி குறித்து நடிகர் டி.எஸ் ராஜு கூறும்போது நான் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.. நான் சாகவேண்டும் என விரும்பும் யாரோ ஒரு நபர் முன்கூட்டியே எனக்கு ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளதாக இதை நினைக்கிறேன்” என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.