இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், சூர்யா , ரஜிஷா விஜயன்,பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ்,லிஜோ மோல் ஜோ நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு பின் பார்வதி அம்மாளின் கதை பலருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சென்னை முகலிவாக்கத்தில் மகள் வீட்டில் வசித்து வந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ஒரு லட்சம் வழங்கி அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க இருப்பதாக தெரிவித்தார். பிறகு தமிழக அரசே பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தர இருப்பதாக அறிவித்தது.
பின்னர் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக தான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்து இருந்தார் .
இந்நிலையில் பார்வதி அம்மாளின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து வீடு கட்டித்தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா , மற்றும் அவருடைய மகன் மகள்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார் .