இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை பூஜா ஹெக்டே. சமீபத்தில் இவர் விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆச்சார்யா, ராதே ஷ்யாம் படங்களில் நடித்தார். தற்போது ஜனகனமன என்ற தெலுங்கு படத்திலும் சர்க்கஸ், கபி ஈத் கபிர் திவாலி ஆகிய ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்து தனியார் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலைய ஊழியர் விபுல் நகாஷா என்பவர் பூஜா ஹெக்டேவிடம் மிரட்டும் தொணியில் நடந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து பூஜா ஹெக்டே எழுதியிருப்பதாவது:
மும்பையிலிருந்து புறப்படும் தனியார் விமானத்தில் அதன் ஊழியர் விபுல் நகாஷே எங்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் முற்றிலும் திமிர்பிடித்த, அறிவற்ற மற்றும் அச்சுறுத்தும் தொனியை எங்களிடம் பயன்படுத்தினார். பொதுவாக நான் இதுபோன்ற பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை. ஆனால் இது உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது. என்று தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பூஜாவை மிரட்டிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூஜாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வற்புறுத்தி வருகிறார்கள்.