பவிஷ் ஜோடியாகும் குஷ்பு மகள் அவந்திகா | நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் |

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை பூஜா ஹெக்டே. சமீபத்தில் இவர் விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆச்சார்யா, ராதே ஷ்யாம் படங்களில் நடித்தார். தற்போது ஜனகனமன என்ற தெலுங்கு படத்திலும் சர்க்கஸ், கபி ஈத் கபிர் திவாலி ஆகிய ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்து தனியார் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலைய ஊழியர் விபுல் நகாஷா என்பவர் பூஜா ஹெக்டேவிடம் மிரட்டும் தொணியில் நடந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து பூஜா ஹெக்டே எழுதியிருப்பதாவது:
மும்பையிலிருந்து புறப்படும் தனியார் விமானத்தில் அதன் ஊழியர் விபுல் நகாஷே எங்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் முற்றிலும் திமிர்பிடித்த, அறிவற்ற மற்றும் அச்சுறுத்தும் தொனியை எங்களிடம் பயன்படுத்தினார். பொதுவாக நான் இதுபோன்ற பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை. ஆனால் இது உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது. என்று தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பூஜாவை மிரட்டிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூஜாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வற்புறுத்தி வருகிறார்கள்.