Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம்

19 மே, 2022 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Early-Moring-show-:-Court-asking-explanation-from-TN-Govt.,

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத விநோதம் ஒன்று இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. அது அதிகாலை 3 மணிக்கும், 5 மணிக்கும் சினிமா காட்சிகள் நடத்துவது. குளித்து விட்டு அதிகாலை கோவிலுக்கு சென்ற காலங்கள் மாறி தியேட்டருக்கு செல்லும் காலம் உருவாகி உள்ளது. ஆரம்பத்தில் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு மட்டுமே நடந்து வந்த இந்த அதிகாலை காட்சிகள், இப்போது அடுத்தடுத்த நடிகர்களுக்கும் நடக்க தொடங்கி இருக்கிறது. அதிகாலை காட்சியை பிரஸ்டீஜாக கருதும் மனோபாவம் நடிகர்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த அதிகாலை காட்சிக்கு ஆப்பு வைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. சென்னை, பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டம், ஒழுங்குமுறை விதிகள், உரிம நிபந்தனைகள்படி, அதிகாலை 1 மணி காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக் கூடாது.

ஆனால் இதனை மீறி திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை காலை 9 மணிக்கு முன்பாக திரையிடப்படுகிறது. அந்த காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்து, பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்பதுடன் வரி ஏய்ப்பும் செய்வதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த சட்டவிரோத சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இதுசம்பந்தமாக தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், இந்த சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், சட்டம், விதி மற்றும் உரிம நிபந்தனைகளை மீறி படங்கள் திரையிடப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது குறித்து தமிழக அரசும், காவல்துறையும் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்!தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை ... கோவையில் அதிர போகும் இளையராஜாவின் இன்னிசை மழை கோவையில் அதிர போகும் இளையராஜாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 மே, 2022 - 17:19 Report Abuse
J.V. Iyer டிவி, திரை அரங்கு, டாஸ்மாக்கையும் எப்போதும் திறந்துவைக்கும் அரசு எப்படி மக்களுக்கு தொண்டுசெய்ய முடியும்? ஓராயிரம் ரூபாய்க்கான ஓட்டுப்போடும் நடைப்பிணமாக மக்கள்.
Rate this:
S.Baliah Seer - Chennai,இந்தியா
19 மே, 2022 - 12:34 Report Abuse
S.Baliah Seer எங்கள் வீட்டுக்குப் பால் போட்டவர் காலை ஆறுமணிக்கு சரக்கு அடித்துவிட்டுதான் வருவார்.அவருக்கு சரக்கு எப்படி கிடைக்கிறது என்பது வேறு விஷயம்.இந்த ரசிக கூட்டங்கள் அதனால்தான் மப்பில் காலை காட்சிகளுக்குச் செல்கிறார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in